Tuesday, 26 October 2010

பதிகம் 129

தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் நிலை சொல்வதெவ்வாறே


உரை (செந்தில்வேல்):

தூக்கம் என்பதை தவம் அல்லது தியானம் என என்ற பொருள் கொள்ளலாம். அவ்வாறு ஆழ்ந்த தவத்தினால் முதல் படியான சிவலோகம் என்கிற, அமைதியே பொருளான இடத்தை தன் மனதுள்ளே காணலாம். சிவலோகம் மட்டும் அல்லாமல் உண்மையை அடையும் யோகத்தையும் , உண்மையான இன்பத்தையும் தனக்குள்ளேயே காணலாம்.


உரை(ஜோ விநிப்றேத்) உரைப்பார் - காத்திருக்கவும்

உரை( சௌமியா) உரைப்பார் - காத்திருக்கவும்


உரை (அரவிந்தன்):

சிறு குறிப்பு:

தூங்கிக்கண்டார் - தியானத்தினால் காண்பது / கனவில் காண்பது / புறத்தில் இருந்து விலகிநின்று காண்பது / இறந்தபின் காண்பது

சிவலோகம் - கைலாயம் / வெற்றிடம் / நல்இருள் / இமாலையம்/ ஒலி

தம்முள்ளே - மனதினுள்ளே / மனிதனின் உள்ளே

விளக்க உரை :

சிறந்த தியானத்தால் சிவலோகத்தை மனதினுள்ளே காணமுடியும்

சிறந்த தியானத்தால் சிவயோகமும் மனதினுள்ளே காணமுடியும்

சிறந்த தியானத்தால் ஷிவபோகமும் மனதினுள்ளே காணமுடியும்

சிறந்த தியானத்தில் இருப்பவர்களின் நிலை சொற்களால் உரைக்க இயலாது.



No comments:

Post a Comment